முதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பியோடிய மணமகள்: பெரும் பரபரப்பு   

  • IndiaGlitz, [Monday,August 02 2021]

முதலிரவன்று மொட்டை மாடி வழியாக எகிறி குதித்து தப்பி ஓடிய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனு என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமணமாகாததை அடுத்து அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உதால் ஹாத்திக் என்பவர் உறுதி அளித்துள்ளார். தனக்கு தெரிந்த பெண் இருப்பதாகவும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் அவரை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து பேரம் பேசி 90 ஆயிரத்துக்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்

இந்த நிலையில் கோர்மி என்ற கிராமத்திற்கு சோனுவை அழைத்துச் சென்ற உதால், அங்கிருந்த அனிதா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தினார். அனிதாவை சோனுவுக்கு பிடித்துவிட்டதால் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்தில் அனிதாவின் உறவினர்கள் என்று கூறிக்கொண்ட ஜிதேந்திர ரத்னகுமார் மற்றும் அருண் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

சோனுவின் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்த நிலையில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்து விட்டு அனைவரும் தூங்க சென்றனர். இந்த நிலையில் முதல் இரவு அன்று மொட்டை மாடிக்கு சென்று வருவதாக கூறிய அனிதா அங்கிருந்து எகிறி குதித்து தப்பி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து சோனுவின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அனிதா மற்றும் அவருடன் சென்ற இருவரை சந்தேகத்திற்கு இடமாக விசாரணை செய்ததில் அவர்கள் போலி திருமணம் செய்து ரூ.90,000 ஏமாற்றியது தெரியவந்தது

இதனை அடுத்து சோனு கொடுத்த புகாரின் அடிப்படையில் அனிதா உள்பட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நீண்ட வருடங்கள் திருமணம் ஆகாமல் இருந்த இளைஞரை ஏமாற்றிய இந்த கும்பலிடம் வேறு யாரேனும் ஏமாந்து இருக்கின்றார்களா? என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

More News

'பீஸ்ட்' படத்தின் 3ஆம்கட்ட படப்பிடிப்பு: பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்!

விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அதன் பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

தளபதி விஜய் தான் டான்சிங் ரோஸ்: ஆர்யாவின் ஃபயர் கமெண்ட்!

சமீபத்தில் வெளியான 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஆர்யாவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனை என்று கூறினால் அது மிகையாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது

'ரோஜா' மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? ஹீரோயினியாக நடிப்பாரா?

'ஜென்டில்மேன்' 'ரோஜா' உள்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த நடிகை மதுபாலா தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகளா?

மீண்டும் ஆன்மீக சுற்றுப்பயணமா? சிம்புவின் வைரல் புகைப்படம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு சபரிமலை, காசி, உள்பட ஒரு பெரிய ஆன்மீக சுற்றுலா வந்து சென்று வந்தார் என்றும் அதனை அடுத்து அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு

உண்மையில் என்ன நடந்தது: ரம்யாகிருஷ்ணன் - வனிதா மோதல் குறித்து நகுல்!

பிக்பாஸ் ஜோடி இந்நிகழ்ச்சியில் வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உண்மையில் அன்றைய நிகழ்ச்சியில் என்ன நடந்தது