close
Choose your channels

பாறையில் ஏறி செல்பி எடுத்த புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த விபரீதம்!

Tuesday, April 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமாகி சில நாட்களே ஆன புதுமண தம்பதிகள் பாறை மீது ஏறி செல்ஃபி எடுத்த போது ஏற்பட்ட விபரீதத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் பலேரி என்ற பகுதியைச் சேர்ந்த ரஜினிலால் மற்றும் கனிகா ஆகியோருக்கு மார்ச் 14-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதி தங்கள் உறவினர்களுடன் ஜானகிக்காடு என்ற இடத்திற்கு ஃபோட்டோஷூட்டுக்காக சென்றனர்.

அங்கிருந்த பாறை மீது ஏறி புதுமணத் தம்பதி செல்பி எடுக்க முயன்றனர். அப்போது திடீரென கால் இடறி இருவரும் ஆற்றினுள் விழுந்தனர். அவர்களை ஆற்றுநீர் இழுத்துச் சென்றது.

இதுகுறித்த தகவல் அறிந்த அங்கிருந்த உறவினர்களும் அந்த பகுதி மக்களும் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் கனிகாவை உயிருடன் அவர்கள் மீட்டாலும் ரஜினிலாலை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கனிகாவின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியிருப்பதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமணமாகி மூன்றே வாரத்தில் புதுமாப்பிள்ளை ரஜினிலால் பலியாகியிருப்பதும் புதுப்பெண் கவலைக்கிடமாக இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகுதியில் அடிக்கடி உயிர்பலி நடப்பதால் அங்கு அபாய எச்சரிக்கை போர்டு வைத்திருப்பதாகவும், ஆனால் அதையும் மீறி மக்கள் செல்வதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos