அரிசி ரேஷன் கார்டுக்கு இன்னொரு ஜாக்பாட்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் எனக் கூறி இருந்தார். அதையடுத்து மே 7 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ரூ.4,000 நிவாரணம் கொடுக்கும் ஆணையில் கையெழுத்து இட்டு அதில் முதற்கட்டமாக ரூ.2,000 இந்த மாதமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் கார்டுகளுக்கும் தற்போது டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து மே 15 ஆம் தேதி முதல் பணம் கொடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மட்டும் அல்லாது தமிழக அரசு மற்றொரு கொரோனா நிவாரணத் திட்டத்தையும் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அதிலும் தினக்கூலி, தெருவோரக் கடைக்காரர்களின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. இதனால் தமிழக அரசு கொரோனா நிவாரண அடிப்படையில் 10-15 சமையல் பொருட்கள் அடங்கிய கிட்டை ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்த பேச்சுவார்த்தையை தற்போது தமிழக அரசு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதோடு இத்திட்டத்தில் எத்தனை பொருட்கள், எவ்வளவு நாட்கள் கொடுப்பது என முடிவு செய்யப்படும் என்றும் இந்தத் திட்டத்திற்கான நிதி ஆதாரம் முடிவு செய்யப்பட்டவுடன் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் எனவும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை வழங்கல் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் தினக்கூலிகள் பலரும் தற்போது உணவிற்காக அல்லாடி வருகின்றனர். இந்த நிலைமையில் தமிழக அரசின் இந்தத் திட்டம் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கடலூர் ரசாயன ஆலையில் திடீர் விபத்து? 3 தொழிலாளர்கள் உயிரிழந்த அவலம்!

கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பாய்லர் வெடித்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது

செவிலியர்கள் காலில் விழுந்த மருத்துவமனை டீன்....!  எதற்கு  தெரியுமா..?

கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ஆன ரவீந்திரன் என்பவர், செவிலியர்கள் காலில் விழுந்து அழுத சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரணத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்...! மருத்துவர் கூறுவது என்ன...?

கருப்பு பூஞ்சை நோயானது, மூக்கிலிருந்து கண்களுக்கும், பின் மூளைக்கும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

செவிலியர் தினத்திற்காக ஒரு 'எஞ்ஜாய் எஞ்ஜாமி' பாடல்: இணையத்தில் வைரல்

இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செவிலியர்களின் சேவை குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

மத்திய அரசு செய்யாது, ஸ்டாலின் நீங்களாவது செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்

தேர்தல்‌ அறிவிக்கப்பட்ட நாள்‌ முதல்‌ பெட்ரோல்‌, டீசல்‌ விலையில்‌ எந்த மாற்றமும்‌ இல்லாமல்‌ இருந்தது. கடந்த 66 நாட்களாக உயராமல்‌ இருந்த விலை தேர்தல்‌ முடிந்ததும்‌ தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.