நெய்வேலி லிக்னசைட் ஆலையில் ஏற்பட்ட விபத்து!!! 17 பேர் காயம் மற்றும் பரபரப்பு தகவல்கள்!!!

  • IndiaGlitz, [Wednesday,July 01 2020]

நெய்வேலி லிக்னைட் ஆலையில் 2 ஆம் நிலையில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. 2 ஆம் நிலையில் இருக்கும் யூனிட் 5 வெடித்து சிதறியாதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தினால் யூனிட் 2 இல் வேலைப் பார்த்த பலரும் தாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது. இதனால் நெய்வேலி பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நெய்வேலி லிக்னைட் ஆலையில் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. நேற்று விசாகப் பட்டினத்தில் தனியாருக்குச் சொந்தமான கெமிக்கல் நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற சம்பவத்தோடு சேர்த்து விசாகப் பட்டினத்தில் இதுவரை 3 விஷவாயு கசிவு சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பும் நெய்வேலி நிலக்கரி ஆலையில் இதுபோன்ற விபத்து நடைபெற்றது. தற்போது 5 ஆவது யூனில் நடைபெற்ற விபத்தால் 17 பேர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் விரிவான தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா மருந்து: நாங்க அப்படி சொல்லவே இல்லையே… பல்டி அடித்த பதஞ்சலி நிறுவனம்!!!

7 நாட்களில் கொரோனா நோய்த்தொற்றை குணமாக்கும் ஆயுர்வேத மருந்து கிட்டை பதஞ்சலி நிறுவனம் கடந்த ஜுன் 23 ஆம் தேதி வெளியிட்டது.

கட்டாயக் கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு காப்பர்-டி, என சிறுபான்மையினரை வதைக்கும் சீன அரசு!!!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாகவே மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

திருமணமான 2 நாட்களில் மணமகன் மரணம்: திருமணத்தில் கலந்த 100க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா!

பீகாரில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் மணமகன் மரணம் அடைந்ததும் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்

நடந்ததை எங்கும் சொல்ல தயார்: சாத்தான்குளம் காவலர் ரேவதி

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழகம்

மனசாட்சியுடன் சாட்சி சொன்ன ரேவதி: திரையுலக பிரபலங்கள் பாராட்டு 

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை