உங்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது என் கனவு: அட்லி குறிப்பிடுவது யாரை?

  • IndiaGlitz, [Monday,May 15 2017]


பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லி, பின்னர் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். முதல் படம் கொடுத்த வெற்றியால் அவருக்கு இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'தெறி'யும் சூப்பர் ஹிட் ஆகி தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து 'தளபதி 61' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்துள்ள 150வது படத்தின் டீசருக்கு தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் அட்லி தெரிவித்துள்ளார். மேலும் 'அர்ஜூன் சார், உங்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. உங்களுடைய 150வது படம் நிபுணன்' வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

'தளபதி 61' படத்தை அடுத்து அட்லியின் அடுத்த பட ஹீரோ யார் என்பது குறித்து இப்போதே கோலிவுட்டில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அட்லியின் நீண்ட நாள் கனவை அர்ஜூன் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தமிழ் மக்கள் ஏமாறுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான். ரஜினி பேச்சின் முழுவிபரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நேரடியாக ரசிகர்களை சந்தித்துள்ளார். இன்று திண்டுக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களை சந்தித்த அவர் ரசிகர்களிடையே தனது சமீபத்திய அனுபவங்கள், அரசியலுக்கு வருவது, மற்றும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்...

'சாவித்ரி' படத்தில் சமந்தா ஜோடி இவர்தான்

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது என்றும், இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்திசுரேஷ் மற்றும் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவுள்ளதும் தெரிந்ததே...

இந்த வருடம் நான்கு இசை விருந்துகள்: அனிருத்

கடந்த 2011ஆம் ஆண்டு தனுஷின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இந்த 6 வருடங்களில் மொத்தம் 14 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு மட்டுமே அவர் இசையமைத்த நான்கு படங்கள் வெளியாகவுள்ளதாக தெரிகிறது...

இன்று நடிகன், நாளை நான் யாரோ? ரசிகர்களிடையே ரஜினியின் உணர்ச்சி பேச்சு

இன்று ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எதிர்காலம், அரசியல் வாழ்க்கை, ஆன்மீகம் ஆகியவை குறித்து உணர்ச்சி பெருக்குடன் பேசினார்...

கேமிராவுக்கு பின்னால் ரஜினிக்கு நடிக்க தெரியாது. எஸ்பி முத்துராமன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்...