close
Choose your channels

அசோக்செல்வனின் அடுத்த படத்தில் நாயகியாகும் விஜய்சேதுபதி பட நடிகை!

Tuesday, May 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஓ மை காட்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள நடிகர் அசோக்செல்வன் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்தரனிடம் உதவி இயக்குனராக இருந்த சுவாதினி என்பவர் கூறிய கதை அவருக்கு பிடித்து விட்டதால் இவரது இயக்கத்தில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளார்

ரொமான்ஸ் மட்டும் காமெடி கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அசோக்செல்வன் ஜோடியாக நிகாரிகா என்பவர் நடிக்கவுள்ளார் இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

அசோக் செல்வன் மற்றும் நிஹாரியா இணையும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘ஓ மை கடவுளே’ படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெற இருப்பதாகவும் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.