close
Choose your channels

100வது நாளை கொண்டாடும் நடிகை நிக்கி கல்ராணி: எந்த நாட்டில் தெரியுமா?

Sunday, August 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்கள் திருமணம் முடிந்த 100வது நாளை வெளிநாட்டில் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலக நட்சத்தி தம்பதிகளான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் ‘யாகாவராயினும் நா காக்க’ மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திருமணமாகி நூறாவது நாள் ஆகியுள்ளதையடுத்து இருவரும் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகரில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்களை நடிகை நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து 100 வது திருமண நாளை சந்தோசமாக லவ் நகரத்தில் கொண்டாடுகிறோம் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

நடிகை நிக்கி கல்ராணி தற்போது ஒரு தமிழ் மற்றும் ஒரு மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் நடிகர் ஆதி 3 தமிழ் படங்கள் மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.