close
Choose your channels

9 மாத குழந்தை கொரோனாவுக்கு பலி! புதுவையில் அதிர்ச்சி

Thursday, July 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புதுவையில் 9 மாத குழந்தை ஒன்று கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

புதுவை மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்த ஒன்பது மாத குழந்தைக்கு டயரியா பிரச்சனை இருந்திருக்கிறது. இதனையடுத்து அந்த குழந்தையை அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலை மோசமானதை அடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தது

இதனையடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழந்தையின் மரணத்தை சேர்த்து புதுவையில் கொரோனா வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து மருத்துவர்கள் கூறிய போது குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு குறைவாக இருக்கும் என்பதால் வீட்டில் கவனத்துடன் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.