சகோதரியின் பிறந்த நாளை ஜாலியாக கொண்டாடிய கனி! வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ’குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி என்பது தெரிந்ததே. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில திரைப்படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக கனி பணிபுரிந்து இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரை வேற லெவலுக்கு பிரபலமாக்கியது என்பதும் குறிப்பாக டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கனியின் சகோதரிகளில் ஒருவரும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்தவருமான நிரஞ்சனி, அந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று நிரஞ்சனி தனது பிறந்த நாளை கொண்டாடினார். திருமணத்திற்கு பின் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் இந்த பிறந்த நாளை சகோதரிகள் விஜயலட்சுமி மற்றும் கனியுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளர். கனி, விஜயலட்சுமி, நிரஞ்சனி சகோதரிகள் மூவரும் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ள புகைப்படத்தை நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

எனக்கே சொந்தமான தீபிகா படுகோன்: செல்வராகவன் பதிவு செய்த புகைப்படம்!

எனக்கே சொந்தமான தீபிகா படுகோன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

அமெரிக்காவில் கோலி சோடா குடிக்கும் தனுஷ்: வைரல் புகைப்படம்!

நடிகர் தனுஷ் தற்போது 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்பதும் கடந்த சில வாரங்களாகவே அவர் அமெரிக்காவில் தான் உள்ளார்

கணவர், குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கொண்டாடிய அஜித்-விஜய் பட நாயகி!

அஜித் நடித்த 'ராசி' விஜய் நடித்த 'நினைத்தேன் வந்தாய்' 'மின்சார கண்ணா' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்பா சமீபத்தில் தனது 45வது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன்

தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளியான பரபரப்பு தகவல்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச இருக்கிறார்.

பிரசன்னா மனைவி உயிரிழப்பு...! சீமான் ஆழ்ந்த இரங்கல்...!

திமுக-வின் மாநில செய்தித்தொடர்பு இணைசெயலாளர்  பிரசன்னா அவர்களின் மனைவி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.