close
Choose your channels

திருமணத்திற்கு பின் நிரஞ்சனி அகத்தியனின் முதல் நெகிழ்ச்சியான பதிவு!

Monday, March 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தை இயக்கிய தேசிய பெரியசாமி என்பவர் அதே திரைப்படத்தில் நடித்த இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆனதை அடுத்து நிரஞ்சனி அகத்தியன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் குறித்த தனது நெகழ்ச்சியான அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு நிமிடமும் எனக்கு பொக்கிஷம் மாதிரி என்றும், என்னுடைய சக நடிகரான துல்கர் சல்மான் அவர்களுக்கு தான் முதல் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், ஏனெனில் இந்த படத்தில் நான் நடிப்பதற்கு எனக்கு முழு ஆதரவு கொடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார். அவருடன் நடித்த முதல் காட்சி எனக்கு இப்பொழுதும் ஞாபகம் உள்ளது என்றும், நான் மிகவும் பதட்டத்துடன் இருந்தபோது அவர்தான் எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினார் என்றும், உங்களுடைய நடிப்பு எப்பொழுது உங்களுக்கு முழு திருப்தி தருகிறதோ அதுவரை நடித்துக் கொண்டே இருங்கள் என்று எனக்கு அறிவுரை கூறினார் என்றும் கூறினார்.

மேலும் அடுத்ததாக நடிகை ரிதுவர்மா குறித்து கூறுகையில், ‘அவர் ஒரு மிகச் சிறந்த சக நடிகை என்றும், அவருடன் பணி செய்யும் போது மிகவும் ஜாலியாக இருந்தது என்றும் அவரும் எனக்கு ஒரு வகையில் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தார் என்றும், அதற்காக நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

அடுத்ததாக ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனரும் தனது கணவருமான தேசிங்கு குறித்து நிரஞ்சனி கூறுகையில், ‘என்னை நம்பி ஒரு மிகச்சிறந்த கேரக்டரை கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்றும், அந்த கேரக்டரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படமும் என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.