திருமணத்திற்கு பின் நிரஞ்சனி அகத்தியனின் முதல் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Monday,March 01 2021]

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தை இயக்கிய தேசிய பெரியசாமி என்பவர் அதே திரைப்படத்தில் நடித்த இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆனதை அடுத்து நிரஞ்சனி அகத்தியன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் குறித்த தனது நெகழ்ச்சியான அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு நிமிடமும் எனக்கு பொக்கிஷம் மாதிரி என்றும், என்னுடைய சக நடிகரான துல்கர் சல்மான் அவர்களுக்கு தான் முதல் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், ஏனெனில் இந்த படத்தில் நான் நடிப்பதற்கு எனக்கு முழு ஆதரவு கொடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார். அவருடன் நடித்த முதல் காட்சி எனக்கு இப்பொழுதும் ஞாபகம் உள்ளது என்றும், நான் மிகவும் பதட்டத்துடன் இருந்தபோது அவர்தான் எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினார் என்றும், உங்களுடைய நடிப்பு எப்பொழுது உங்களுக்கு முழு திருப்தி தருகிறதோ அதுவரை நடித்துக் கொண்டே இருங்கள் என்று எனக்கு அறிவுரை கூறினார் என்றும் கூறினார்.

மேலும் அடுத்ததாக நடிகை ரிதுவர்மா குறித்து கூறுகையில், ‘அவர் ஒரு மிகச் சிறந்த சக நடிகை என்றும், அவருடன் பணி செய்யும் போது மிகவும் ஜாலியாக இருந்தது என்றும் அவரும் எனக்கு ஒரு வகையில் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தார் என்றும், அதற்காக நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

அடுத்ததாக ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனரும் தனது கணவருமான தேசிங்கு குறித்து நிரஞ்சனி கூறுகையில், ‘என்னை நம்பி ஒரு மிகச்சிறந்த கேரக்டரை கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்றும், அந்த கேரக்டரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படமும் என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 

More News

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து மரணம்? அதிர்ச்சி தகவல்!

சுவிட்சர்லாந்தில் ஃபைசர்-பயோன் டெக் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியும் தற்போது பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தலைக்கு ஏறிவிட்ட போதை… தன் ஆண்குறியை தானே வெட்டி எறிந்த பரிதாபம்!

ஜெர்மனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் மயங்கிய நபர் ஒருவர் தன்னுடைய ஆண் உறுப்பை தானே வெட்டி எறிந்த பரிதாப நிகழ்வு நடந்து உள்ளது.

சூப்பர்ஹிட் பாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் ஆர்ஜே பாலாஜி! கே.பாக்யராஜூடன் பேச்சுவார்த்தை!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்றை ரீமேக் செய்ய ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்து பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் உடன்

முக ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய ரஜினிகாந்த்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள்,

லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு: வைரல் புகைப்படங்கள்!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது