close
Choose your channels

நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதி?

Thursday, December 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் இந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் மத்தியிலும் நிர்பயாவின் குடும்பத்தினர் மத்தியிலும் அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு தீ வைத்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான நால்வர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பான சம்பவத்தை அடுத்து நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் ஏழு வருடங்களாக தண்டனை அனுபவிக்காமல் தப்பித்துக்கொண்டிருப்பதாகவும், இந்த கொலையாளிகளுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் நாடு முழுவதும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதனை அடுத்து வரும் டிசம்பர் 16ஆம் தேதி நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருவதாகவும் தூக்கிலிடும் பணியை நிறைவேற்ற உத்தரபிரதேசத்தில் இருந்து சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.