close
Choose your channels

கையில் கட்டப்பை! காத்திராத உறவினர்கள்: ஜாமீனில் வெளிவந்த நிர்மலாதேவி

Wednesday, March 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் 11 மாதங்கள் கழித்து இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.

நிர்மலாதேவியை ஜாமீனில் வெளியே எடுக்க அவரது உறவினர்களே முன்வராத நிலையில் வழக்கறிஞரின் உதவியால் ஜாமீனில் வெளிவந்த நிர்மலாதேவியை அழைத்து செல்ல கூட உறவினர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

சிறை வாசலில் காத்திருந்த வழக்கறிஞர் மட்டும் செய்தியாளர்களிடம், 'இது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்றும், நிர்மலாதேவி மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்பதை நிரூபித்து விரைவில் அவர் விடுதலை ஆவார் என்றும், தற்போது பல எதிர்ப்புகளுக்குப் பின் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும்' தெரிவித்தார்.

கையில் மூன்று கட்டப்பைகளுடன் உறவினர் துணையின்றி தனியாக அவர் தன் வீட்டிற்கு நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.