close
Choose your channels

'நிசப்தம்' தியேட்டரிலா? ஓடிடியிலா? தயாரிப்பாளர் விளக்கம்

Saturday, May 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 29ஆம் தேதி ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படமும் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீசாக உள்ளது

இந்த நிலையில் அனுஷ்காவின் ’நிசப்தம்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திரைஅரங்கில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த படமும் ஐந்து மொழிகளிலும் போட்டி ஓடிடியில் வெளியாக போவதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி அனுஷ்கா ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இதுகுறித்து ’நிசப்தம்’ படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "’நிசப்தம்’ திரைப்படம் வெளியீடு குறித்து ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. திரையரங்கில் வெளியிடுவதற்குத் தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நீண்ட நாட்கள் சூழ்நிலை அந்த முடிவுக்குச் சாதகமாக இல்லையென்றால், அப்போது ஓடிடி தளத்தை வெளியிடுவதற்கான மாற்றாகப் பார்ப்போம். நல்லது நடக்கும் என நம்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.