close
Choose your channels

நிதின் சத்யாவின் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில்!

Thursday, October 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் நிதின்சத்யா தயாரித்த முதல் படமான 'ஜருகண்டி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது வைபவ் நடித்து வரும் படம் ஒன்றை தயாரித்து வருகிறார். வைபவ் போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தின் நாயகியாக தொலைக்காட்சி தொடர் நடிகை வாணிபோஜன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் 'காலா' நடிகை ஈஸ்வரிராவ் மற்றும் பூர்ணா, மைம்ஸ் கோபி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபுவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் மோகன்ராஜாவிடம் உதவியாளராக இருந்த எஸ்.ஜி. சார்லஸ் இயக்கும் இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே நிதின் சத்யா அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் ‘லாக்கப்’ என அறிவிக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியாகியுள்ளது

இந்த படத்தின் முதல் லுக் விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.