close
Choose your channels

ஐஸ்வர்யாவை நல்லவராக்கும் முயற்சியில் பிக்பாஸ் செய்யும் தந்திரம்

Tuesday, September 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. வரும் வெள்ளி அன்று இறுதிப்போட்டி நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் யார்? என்பது தெரிந்துவிடும்.

இந்த நிலையில் இப்போது வரை பதிவான வாக்குகளில் ரித்விகாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தாலும் பிக்பாஸின் விருப்பத்திற்குரிய போட்டியாளரான ஐஸ்வர்யாவை நல்லவராக்கும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 1, மற்றும் பிக்பாஸ் சீசன் 2வில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக முடிந்தவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள பாலாஜி மனைவி நித்யாவும் ஐஸ்வர்யாவுக்கு பரிந்தே பேசியுள்ளார். ராணி மகாராணி டாஸ்க்கில் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பையை கொட்டியது தனக்கு மனவருத்தத்தை தந்தாலும் ஐஸ்வர்யாவைவிட மற்ற போட்டியாளர்கள் மீதுதான் தனக்கு வருத்தம் அதிகமாக இருந்ததாகவும், ஐஸ்வர்யாவுக்கு யாருமே எடுத்து சொல்லவில்லை என்றும், அவர் குப்பை கொட்டியதை யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து ஐஸ்வர்யாவை நல்லவராக்க முயற்சித்து வருவதால் திடீரென ஐஸ்வர்யாவுக்கு அதிகமாக வாக்குகள் விழுந்ததாக ஒரு கதைகட்டி அவரை வின்னராக பிக்பாஸ் அறிவித்து விடுவாரோ என்ற பயம் அனைவரின் உள்மனதில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.