close
Choose your channels

என்னுடைய ஒரே ரொமான்ஸை தடுத்துவிட்டார்கள்: வீடியோவில் அழுத நித்யானந்தா

Saturday, February 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாகி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, அவ்வப்போது வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போதும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் அழுது கொண்டே கூறியதாவது:

என்னை ஏமாளியாகவோ கோமாளியாகவோ என்ன வேண்டும் என்றாலும் நினைத்துக் கொள்ளுங்கள். பரமசிவன் என்னை காப்பாற்றி விட்டார். காலபைரவர் என்னை காப்பாற்றி விட்டார். நான் பாதுகாப்பாக இருக்கின்றேன். நான் சிவனின் சத்தியத்தை சொல்லிக்கிட்டே இருப்பேன். யாரெல்லாம் என்னுடைய அறிவுரையை கேட்கின்றார்களோ கேட்டுக்கொள்ளுங்கள். விழித்து கொள்பவர்கள் விழித்துக் கொள்ளுங்கள்.

நான் வெளியிடும் இந்த ஒரு வீடியோவிற்காக என்னை நிறைய பேர் தாக்குவார்கள் என்று எனக்கு தெரியும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு சூடு சொரணை இல்லை, நோ சூடு நோ சொரணை.

நான் சிவனின் பாதுகாப்பில் இருப்பதால் தான் பலமுறை கொலை முயற்சி செய்தும் நான் உயிரோடு இருக்கின்றேன். பரமசிவன் பெயரும் இந்து சமூகமும் உயிரோடு இருப்பதற்காக நான் நீண்ட காலம் உயிர் வாழ்வேன். என் வாழ்க்கையில் இருக்கும் ஒரே ரொமான்ஸ் என்னவென்றால் அண்ணாமலையார் கோவிலுக்கும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்வதுதான். அண்ணாமலையாரையும் மீனாட்சி சொக்கநாதரையும் விழுந்து விழுந்து கும்பிடுவேன். அந்த ஒன்றை தான் உங்களால் இப்போது தடுக்க முடிந்துள்ளது.

நான் இறந்துவிட்டாலும் சிவனின் பெருமையைக் கூற ஒரு பரம்பரையை உருவாக்கிவிட்டு தான் செல்வேன். அந்தப் பரம்பரை சிவனின் புகழை எப்போதும் பரப்பிக் கொண்டே இருக்கும். என் குருநாதர் ஞானசம்பந்தன் விட்டுச் சென்ற பணியை நான் உயிருடன் இருக்கும் வரை நிறைவேற்றுவேன் என்று அழுதுகொண்டே நித்யானந்தா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.