தனி நாட்டின் அதிபராக நித்தியானந்தா..இந்துக்களுக்கு மட்டும் விசா..

 

தனி நாட்டின் அதிபராக நித்தியானந்தா.. இந்துக்களுக்கு மட்டும் விசா..உலக இந்துக்களின் ஒரே தலைவராக தன்னை அறிவிக்கவுள்ளார்..! நித்தியானந்தாவை குஜராத் மற்றும் கர்நாடக காவல்துறை பாலியல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் அவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடி தென்னமெரிக்காவில் உள்ள ஈக்குவடார் நாட்டிற்கு சொந்தமான ஒரு தீவில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அந்த தீவை தனி நாடக அறிவிக்க உள்ளதாகவும் அதற்கு கைலாஷா என்று பெயரிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.இப்போது kailaasa.org என்ற ஒரு வலைப்பக்கம் நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பக்கத்தில் நித்தியின் கைலாஷா தேசத்தைப் பற்றியும் அந்த நாட்டில் வழங்கப்படப்போகும் சேவைகள் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. இந்துக்களாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாட்டிற்குள் செல்லலாம்,தங்கலாம். இந்துக்களாக மாற விரும்புபவர்களுக்கும் நாட்டில் இடமும் எல்லா வசதிகளும் உண்டு. நாட்டில் அனைவருக்கும் இலவச கல்வி இலவச உணவு இலவச மருத்துவ சேவைகள் போன்றவை தொடங்கப்பட உள்ளன.இந்த நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான பதிவு விண்ணப்பம் கைலாஷா வலைப்பக்கத்திலேயே கிடைக்கின்றது.

எதற்காக இப்போது தனி நாடு என்று நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது, “கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் சிட்டி, இஸ்லாமியர்களுக்கு மெக்கா இருப்பதுபோல், இந்துக்களுக்கென்று ஒரு தலைநகரமாக தனது தீவு இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் நித்தியானந்தா. அந்தத் தீவுக்கு 'கைலாசா’ என்று பெயர் சூட்டியுள்ளார். இப்போது நித்தி மற்றும் நித்தி தரப்பினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் அனைத்திலும் 'கைலாசா’ என்ற பெயர் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். கைலாசாவை இந்து மதத்தின் தலைமையிடமாக அறிவித்து, கிறிஸ்துவர்களுக்கு போப் ஆண்டவர் போல் தன்னை இந்து மதத்தின் தலைவராக பிரகடனப்படுத்திக் கொள்ளும் மாஸ்டர் திட்டமே இப்போது நித்தியிடம் இருக்கிறது. இதற்காக நந்தி அருகில் நித்தியானந்தா அமர்ந்திருப்பதுபோல் தனிக்கொடி உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று அதிரவைக்கிறார்கள்.

More News

வீட்டை விட்டு ஓடி வந்த 10ஆம் வகுப்பு மாணவி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த கொடுமை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டைவிட்டு கோபித்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்

போலீஸ் காரில் லிப்ட் ஏறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டி, தமிழகத்தில் ரோஜா என சமீப காலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருந்த நிலையில்,

காவலர் மனைவியுடன் கள்ளக்காதல்: விஏஓ மீது ஆசிட் வீச்சு

காவலர் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

உலகின் ஒரே சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன்: ஒரே செல்பியால் உலகப் புகழ் பெற்ற இளைஞர் பேட்டி 

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சமீபத்தில் சந்தித்த மாற்றுத்திறனாளி பிரணவ் என்பவர் அவருடன் ஒரே ஒரு செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உலகப்புகழ் பெற்றார். 

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அடுத்த அட்டகாசமான அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் அவர் தற்போது 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்