ஏழுமலையான் அவதாரத்தில் நித்யானந்தா: எல்லை மீறி செல்லும் சேட்டை!

பாலியல் வன்முறை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா திடீரென இந்தியாவை விட்டு வெளியேறி ’கைலாசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் தனது நாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கு தொழில் தொடங்குவது உள்பட பல்வேறு சலுகைகள் தருவதாகவும் அவர் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய ஒவ்வொரு சீரியஸான அறிவிப்பையும் பொதுமக்கள் காமெடியாக ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே தன்னைத்தானே கடவுள் என்றும், தான் சிவனின் அவதாரம் என்றும் கூறிக்கொள்ளும் நித்தியானந்தா தற்போது தனது பேஸ்புக்கில் திருப்பதி ஏழுமலையான் போல் காட்சி அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவது போன்றும், தன்னை வணங்கினால் நிதி நெருக்கடியில் இருந்து வெளியே வந்து ஏராளமான செல்வங்கள் பெருகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் உண்மையான ஏழுமலையான் பக்தர்களை சங்கடப்படுத்தி உள்ளது.

இந்திய அரசால் தேடப்படும் ஒருவர் தன்னைத் தானே கடவுள் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் இந்திய அரசால் பிடிபட்ட பிறகு உண்மையிலே அவர் கடவுளா? அல்லது கைதியா? என தெரிய வரும்.

More News

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: சிஎஸ்கே வியூகங்கள் என்ன?

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த ஐபிஎல் தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள்

இணையத்தை கலக்கும் விஜய் நாயகியின் கேரள சேலை புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 65' என்பதும்

தனுஷ் பட நாயகிக்கு கொரோனா பாசிட்டிவ்: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜெகமே தந்திரம்' என்ற படத்தின் நாயகிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 வருடங்களுக்கு பின் மீண்டும் கமல் ஏற்கும் வேடம்: 'விக்ரம்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம்

கொரோனா பாதிப்பு குறித்து ராதிகா சரத்குமார் விளக்கம்!

நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நேற்று செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர் தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார்