கைலாஷா நாட்டின் நாணயத்தை வெளியிட்டார் நித்தி: காமெடியின் உச்சகட்டம் அரங்கேறியதா?

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாஷா நாட்டின் நாணயத்தை வெளியிடப்போவதாகவும், உள்ளூர் மக்களுக்காக ஒரு நாணயமும் வெளிநாட்டு பரிவர்த்தனைக்காக ஒரு நாணயமும் என இரண்டு வகை நாணயங்கள் வெளியிடப் போவதாகவும் சமீபத்தில் நித்தியானந்தா தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ’தான் கைலாஷா நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் என்று கூறப்படுவதை விரும்பவில்லை என்றும் தான் ’கடவுள்’ என்றும், தான் மட்டுமின்றி மக்கள் அனைவருமே கடவுள் என்றும் அனைவரையும் கடவுளாக்க பாடுபட்டு கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

நித்யானந்தாவின் இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இதை காமெடியாகவே நெட்டிசன்கள் வசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைலாஷா நாட்டின் நாணயத்தை உண்மையாகவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நித்தியானந்தம்.

இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியானந்தா ஒரு நாட்டின் அதிபர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டதோடு, அந்நாட்டின் நாணயத்தையும் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இல்லாத ஒரு நாட்டுக்கு நாணயத்தை வெளியிட்டுள்ள நித்தியானந்தாவின் காமடி உச்சகட்டத்தை அரங்கேறியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

More News

தமிழ் நடிகையின் இடுப்பில் கைவைத்தாரா பாஜக முதல்வர்? வைரலாகும் வீடியோ

பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் தமிழ் நடிகை ஒருவரின் இடுப்பில் கைவைத்ததாக வைரலாகி வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த..: சிஎஸ்கே வீரரின் அதிர வைக்கும் டுவீட்

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட மொத்தம் 8 அணிகள் விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தி தெரியாதவர்கள் விலக வேண்டுமா? கமல்ஹாசன், வைரமுத்து ஆவேசம்!

சமீபத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில்

வந்தாரை வாழ வைக்கும் சென்னை: சென்னை தின சிறப்பு கட்டுரை

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழகத்தின் உள் மாவட்ட மக்களை குறிப்பாக தென்மாவட்ட மக்களை வாழ வைக்கும் தாய் வீடாக சென்னை இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

139 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்: 25 வயது பெண்ணின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

25 வயது பெண் ஒருவர் தன்னை கடந்த சில ஆண்டுகளாக 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது