close
Choose your channels

நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்: நீதிமன்றத்தில் பரபரப்பு

Saturday, December 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நித்தியானந்தாவை தேடி கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் போலீசார் ஒருபக்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, நித்தியானந்தாவின் இரண்டு பெண் சீடர்களான தனது மகள்களை கண்டுபிடித்து தரவேண்டும் என அந்தப் பெண்களின் தந்தை குஜராத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது இரண்டு பெண் சீடர்களின் சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தாங்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் தங்களுடைய தந்தையால்தான் தங்களுடைய உயிருக்கு ஆபத்து என்றும், தாங்கள் இந்தியா வர விரும்பவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது

இதனை அடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இரண்டு பெண் சீடர்களும் ஆஜராகி கூறியபோது, ‘நாங்கள் ஒரு தீவில் இருக்கின்றோம். இருவரும் சந்தோசமாக சுதந்திரமாக இருக்கின்றோம். இந்தியாவுக்கு நாங்கள் வர விரும்பவில்லை. எங்களுடைய தந்தையால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

ஆனால் இந்த இரண்டு பெண் சீடர்கள் சொல்வதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். நீங்கள் எந்த நாட்டில் இருக்கின்றார்களோ அந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தில் உடனே ஆஜராக வேண்டும் என்றும் அங்கிருந்தே நீதிமன்றத்திற்கு வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் இந்த இரண்டு பெண்களும் எந்த நாட்டில் உள்ளனர் என்பதை கண்டுபிடித்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.