பாலாற்றில் வெள்ளப் பெருக்கு… 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

நிவர் புயல் கரையைக் கடந்தப் பின்பும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஒட்டிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் அதன் உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் கரையில் இருக்கும் 40 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாகத் தமிழக எல்லையில் நுழையும் பாலாறு சுமார் 222 கி.மீ பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அருகே வயலூர் கிராமப் பகுதியில் கடலில் கலக்கிறது. இந்நிலையில் பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் தற்போது திறக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இதனால் பாலாற்றின் கரையோரம் இருக்கம் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து, “காவேரி பாக்கம் தடுப்பணை திறக்கப்பட்டு உள்ளதால் பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் பள்ளிக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் சமுதாய கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தேவையான அடிப்படை வசதிகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

More News

இத நான் யார்கிட்டயும் சொல்லல: இரண்டாவது மனைவி குறித்து மனம் திறந்த பிக்பாஸ் சரவணன்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் சரவணன் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் 46வது நாளில் திடீரென வெளியேற்றப்பட்டு விட்டார் என்பதும் தெரிந்ததே.

புதிய புயலால் வரப்போகும் பாதிப்பு… இந்திய வானிலையின் எச்சரிக்கை!!!

நிவர் புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பும் பின்பும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதேபோல வரும் நவம்பர் 29

அர்ச்சனா மடியில் ரியோ, தலைவாரி விடும் நிஷா: குரூப்பெல்லாம் இல்ல!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் எந்தவித குரூப்பும் இல்லை என்ற என நம்ப வைக்க அந்த குரூப்பில் உள்ளவர்கள் போராடி வரும் நிலையில் இன்றைய

பாலாஜி பாணியிலேயே பாலாஜியை வெறுப்பேற்றிய ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியின் கேரக்டர் ஒட்டுமொத்த முரண்பாடாக உள்ளதை பலமுறை பார்த்துவிட்டோம். திடீரென ஆத்திரத்தில் பொங்கி எழுவார், திடீரென நக்கலாக எதிராளியை குத்தி காட்டுவார்,

இந்த வாரம் பாலாஜிக்கு குறும்படம் உண்டா? கமலிடம் எதிர்பார்க்கும் பார்வையாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் வாக்குவாதங்கள் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு வாக்குவாதத்தில் பாலாவை போட்டியாளர்கள்