ஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொட்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்??? புது விளக்கம்!!!

  • IndiaGlitz, [Monday,September 28 2020]

 

ஊழர் புகார் குறித்த தகவல்கள் மொட்டை (அடையாளம் காண முடியாத நபர்) கடிதம் மூலம் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக ஊழல் புகார்களைக் குறித்து மொட்டைக் கடுதாசி போடும் வழக்கம் நம்ம ஊரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உண்டு. ஆனால் இப்படி கொடுக்கப்படும் புகார் கடிதங்கள் அனைத்தும் உண்மைத் தன்மை கொண்டதுதானா என்பதுபல நேரங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பழி வாங்கும் நடவடிக்கைக்காகக் கூட சில நேரங்களில் இப்படி ஊழல் புகார்களை மொட்டை கடிதங்கள் மூலம் அனுப்புவது வாடிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் ஊழல் புகார் கடிதங்கள் முகவரி மற்றும் தொலைத் தொடர்பு எண்கள் இல்லாமல் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட கூடாது என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. மேலும் பெயர், ஊர் எதுவும் இன்றி மொட்டை கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் ஊழல் புகார்களை அடிப்படையாக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஏற்கனவே அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் மொட்டை கடிதத்தை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு சில வழக்குகள் விசாரிக்கப் படுவதாகக் கூறப்படும் நிலையில் தற்போது மீண்டும் இத்தகவலை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஊடகங்களுக்கு மத்தியில் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால் மொட்டை கடிதத்தின் மூலம் வரும் புகார்களை விசாரிக்க வேண்டாம் என்றும் அப்படி விசாரிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

More News

ஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்!

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்தது.

இசை மேதையுடன் எஸ்பிபி: அரிய புகைப்படத்தை வெளியிட்ட விவேக்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான நிலையில் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் அவருடன் பழகிய நாட்கள்,

30 நாட்களில் உருவாகும் சிம்பு படம்: 'மாநாடு'க்கு முன் முடிக்க திட்டம்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'.

குடிநீரில் மூளையைத் திண்ணும் அமீபா!!! கொலை நடுங்க வைக்கும் தகவல்!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விநியோகிக்கப்படும் மாநகரக் குடிநீரில் மூளையை உண்ணும் அமீபா கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளமாக ஓடிய ரெட் ஒயின்… வீடியோவை பார்த்து ஆதங்கப்படும் குடிமகன்கள்… வைரல் தகவல்!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக நம்ம ஊரு ஒயின்ஷாப்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடிக்கிடந்தது.