close
Choose your channels

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: தமிழக அரசு மேல்முறையீடா?

Wednesday, August 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இன்று காலை உத்தரவிட்டதை அடுத்து அண்ணா சமாதியின் பின்புறம் கருணாநிதிக்கு சமாதி அமைக்கும் பணி தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படுமா? என்ற ஐயம் அரசியல் தலைவர்களிடையே இருந்தது.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சென்னை மெரீனாவில் கருணாநிதியின் சமாதி அமைவது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.