'விஸ்வாசம்' தடை: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,January 09 2019]

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக விஸ்வாசம்' திரைப்படத்தை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்ததால் அந்த பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

இந்த நிலையில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் விஸ்வாசம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கோவை பகுதியின் விநியோகிஸ்ர் சாய்பாபா தரப்பில் இருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சற்றுமுன் விசாரணைக்கு வந்தபோது 'சாய்பாபா பெற்றிருந்த கடன் தொகை ரூ.78 லட்சம் ரூபாயில் முதலாவது தவணையாக ரூ.35 லட்சத்தை உடனடியாக திருப்பித் தரவும், மீதமுள்ள பணத்தை 4 வாரங்களுக்குள் தருவதாகவும் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. இந்த உறுதியை பைனான்சியரும் ஏற்று கொண்டதால் விஸ்வாசம் படத்தை ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மேற்கண்ட மூன்று நகரங்களிலும் எந்தவித பிரச்சனையும் இன்றி நாளை விஸ்வாசம் படம் திரையிடப்படுகிறது.