close
Choose your channels

தமிழகம் முழுவதும் ஜூலை 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு

Monday, July 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுப்பதற்காக, பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, 24.03.2020 முதல்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்‌ தொடர்ந்து கொரோனா தொற்றின்‌ நிலைமையை கருத்தில்‌ கொண்டும்‌, மக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டும்‌, சில தளர்வுகளுடன்‌ 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுக்க மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொண்டு வரும்‌ நிலையில்‌, கொரோனா நோய்த்‌ தொற்று பரவலை கட்டுப்படுத்தும்‌ நோக்குடன்‌, மாநிலத்தில்‌ தனியார்‌ மற்றும்‌ அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.07.2020 முதல்‌ 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன்‌ 31.07.2020 முடிய தனியார்‌ மற்றும்‌ அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது.

தமிழ்நாடு அரசின்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.