ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்: நெஞ்சில் பாலை வார்த்த நிறுவனம்!!!

  • IndiaGlitz, [Friday,May 15 2020]

 

உலகில் பெரும்பாலான நாடுகள் கடந்த 2 மாதமாக ஊரடங்கில் முடங்கி கிடந்தது. இந்நிலையில் பல பெரும் நிறுவனங்கள் கூட ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தை வழங்க முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டன. இதில் பலத் தொழிலாளிகளின் வேலைக்கு உத்திரவாதம் இல்லாத நிலையும் ஏற்பட்டது. அதோடு, தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் தொழிலாளிகளின் நிலைமை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

நிலைமை சமாளிக்க, உலகின் பல நாட்டு அரசுகள் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கக்கூடாது, அவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என்று நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தது. ஆனாலும் இக்கருத்து சாத்தியமாகுமா என்ற அச்சம் எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது. இத்தகைய நெருக்கடி நிலையில் ஒரு நிறுவனம் தானாக முன்வந்து “தன் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் யாரையும் வேலையை விட்டு நீக்கப் போவதில்லை. எனவே பயம் இல்லாமல் தொழிலாளர்கள் அனைவரும் உங்களது வீட்டில் உள்ளவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வளவு பெருந்தன்மையை கொண்டவர், அமெரிக்காவின் மிகப்பெரிய கடன் அட்டை நிறுவனமான மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா தான். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதுபற்றி அஜய் பங்கா “முதலில் லாக் டவுன் ஆரம்பித்த போதே கொரோனா தொடர்பாக யாரும் வேலையை விட்டு நீக்கப்பட மாட்டார்கள். ஊழியர்கள் வேலை குறித்துக் கவலைப்படாமல் தங்களது குடும்பத்தையும், சக ஊழியர்களையும், அவர்களது வாடிக்கையாளரையும் கவனமாகப் பார்த்து கொள்ள வேண்டும்” எனக் கூறியதாகத் தற்போது கூறியிருக்கிறார். ஊரடங்கு காரணமாக அமெரிக்க மக்கள் தொகையில் கால்வாசி பேர் தங்களது வேலையை இழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

இதுவரை வுஹான் மாகாணத்தில் நடத்தப்பட்ட கொரோனா மறு–பரிசோதனை எவ்வளவு தெரியுமா???

சீனாவில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பல மாகாணங்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பி இருக்கிறது.

கொரோனா சிகிச்சை: Remdesivir மருந்து தயாரிப்பில் இந்தியாவின் அடுத்தக் கட்டம்!!!

கடந்த மாதம், அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தை பயன்படுத்தி அதில் வெற்றிப் பெற்றதாகச் செய்திகள் வெளியாகின.

170 வருட நன்றியை திருப்பி செலுத்தும் அயர்லாந்து மக்கள்!!! மனதைப் பிழியும் வரலாற்றுச் சம்பவம்!!!

உலகில் வல்லரசு நாடாக விளங்கிவரும் அமெரிக்கா கொரோனா வைரஸால் கடுமையான அழிவுகளைச் சந்தித்து வருகிறது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.

டாஸ்மாக் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மே 7-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி