'மாஸ்டர்' நடிகையின் அடுத்த பட அட்டகாசமான டைட்டில்! விஜய் ஆண்டனி வெளீயீடு

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’ஆயிரத்தில் ஒருவன்’ ’மங்காத்தா’ ’விஸ்வரூபம்’ ’அரண்மனை’ ’ஆம்பள’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா

சமீபத்தில் இவர் நடித்த ’வடசென்னை’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பதும் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

’நோ எண்ட்ரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அழகு கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார். ரமேஷ் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில், அஜேஷ் சதீஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஜம்போ சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மலை நடுவே 30 ஆண்டுகளாக கால்வாய் தோண்டிய தனி ஒருவன்!!! சாதனை சம்பவம்!!!

பீகார் மாநிலத்தில் கயா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியாக ஒரு நபர் மலையைக் குடைந்து கால்வாயை வெட்டி வருகிறார்.

தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்… சுவாரசியத் தகவல்!!!

சிங்கப்பூரில் ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது விற்பனை நிலையத்தை தொடங்கியிருக்கிறது

மின்கம்பியை மிதித்த சென்னை பெண் சுருண்டு விழுந்து பலி: வைரலாகும் சிசிடிவி வீடியோ

சென்னையில் தண்ணீரில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் 35 வயது பெண் ஒருவர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விக்னேஷ் சிவனுடன் கோவா டூர் சென்ற நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே செல்லாத நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் காதல் ஜோடி, ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும்

சூர்யாவுக்கு எதிராக ஒரே ஒரு நீதிபதி, ஆதரவாக ஆறு நீதிபதிகள் கடிதம்: பெரும் பரபரப்பு

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீதிமன்றம் குறித்து அவர் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையானது