அர்னாப் கோஸ்வாமிக்கு எந்த இந்தியனும் உதவக்கூடாது: தற்கொலை செய்த பொறியாளரின் மகள்!

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இன்று காலை அதிரடியாக மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரது கைதுக்கு பத்திரிகை துறையினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட பொறியாளரும் அன்வி நாயக் என்பவரின் தற்கொலை தான் காரணம் என்றும் அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதத்தில் அர்னாப் கோஸ்வாமி தனக்கு தரவேண்டிய 5.8 கோடி ரூபாயை தராததால் நிதி நெருக்கடி காரணமாகத்தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்தே அர்னாப் கோஸ்வாமி இன்று போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த அன்வி நாயக் மனைவி மற்றும் மகள் சில கருத்துக்களை பத்திரிகையாளர்கள் முன் தெரிவித்தனர். குறிப்பாக அன்விக் நாயக் மகள் தனது பேட்டியில் ’அர்னாப் கோஸ்வாமி ரவுடிகளை வீட்டு அனுப்பி எங்களை மிரட்டினார் என்றும் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார் என்றும் அவரது கைதுக்காகதான் இத்தனை மாதங்கள் காத்திருந்தோம் என்றும் கூறியுள்ளார். மேலும் எனது தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அதனால் அர்னாப் கோஸ்வாமிக்கு எந்த இந்தியனும் உதவி செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அன்வி நாயக்கை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மும்பை போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

பிரியமானவருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த முத்தம்: வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

சம்யுக்தாவை கதறி அழ வைத்த பிக்பாஸ்: செண்டிமெண்ட் ஆரம்பமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினரையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பியும், நேரில் வரவழைத்தும் சென்டிமெண்ட் காட்சிகள் ஆரம்பமாவது உண்டு.

பைக்கில் வந்த அஜித்: கரவொலி எழுப்பி வரவேற்ற 'வலிமை' படக்குழு!

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

மீண்டும் ஒரு ஆழ்துளை துயர சம்பவம்: 3 வயது குழந்தையின் நிலை என்ன?

தமிழகத்தில் சுஜித் என்ற சிறுவன் ஆள்துளை கிணற்றில் கடந்த ஆண்டு விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பதும் அதன் பின்னராவது

க/பெ ரணசிங்கம்' இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த சிறப்பு பரிசு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் கடந்த மாதம் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியானது