close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் இல்லை: ஓவியா

Friday, September 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வின்னராக ஆரவ் இருந்தாலும் இன்றளவும் மக்களின் மனதை வென்ற ஒரே போட்டியாளர் ஓவியாதான். பிக்பாஸ் 2 சிசனில் விளையாடி வருபவர்களும் ஓவியா போல் புகழ் பெற, ஓவியா போல் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இலங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அந்நாட்டு மக்களுடன் கலந்துரையாடிய ஓவியா, 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றும் இந்த நிகழ்ச்சியினால் எனக்கு கிடைத்த நல்ல விஷயம் மக்களின் அன்புதான் என்றும் தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வெளியே சென்றால் தன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது என்றும், ஆனால் இன்று வெளியே சென்றால் மக்கள் தன்மீது அன்பு மழை பொழிவதாகவும், இந்த அன்புக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அதே நேரத்தில் இந்த அன்புக்கு நான் தகுதியுடையவரா? என்று தெரியவில்லை என்றும் ஓவியா கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தான் பார்க்கவில்லை என்று டுவிட்டரில் கூறிய ஓவியா, சமீபத்தில் தனது டுவிட்டரில் 'ஐஸ்வர்யா தத்தா' என்று மட்டும் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.