close
Choose your channels

ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் இல்ல- மன அழுத்தத்தில் மாணவி எலி மருந்து குடித்த பரிதாபம்!!!

Tuesday, September 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் இல்ல- மன அழுத்தத்தில் மாணவி எலி மருந்து குடித்த பரிதாபம்!!!

 

கள்ளக்குறிச்சி அடுத்த உளுந்தூர்பேட்டையில் 1 ஸ்மார்ட்போனை வைத்து 3 சகோதரிகள் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரே நேரத்தில் 3 பேரும் வகுப்புகளை கவனிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நர்ஸ் படிப்புக்கு படித்துவந்த ஒரு கல்லூரி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உளுந்தூர்பேட்டை அடுத்த மேட்டுநன்னாவரம் எனும் கிராமத்தைச் சார்ந்த விவசாயி ஆறுமுகம். அவரது 3 மகள்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மூத்த மகள் திருச்சியில் உள்ள தனியார் செவிலியர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் 12 ஆம் வகுப்பும் கடைசி பெண் 8 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மூன்று பேருக்குமே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஏழை விவசாயியான ஆறுமுகம் ஒரு ஸ்மார்ட்போனை மட்டும் வாங்கி கொடுத்திருக்கிறார். இந்தப் போனை வைத்து 3 பேரும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள் என அப்பா தனது மகள்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மூத்த மகள் ஸ்மாட்போனை வைத்து ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மற்ற 2 பேருக்கும் வகுப்பு தொடங்கவிருந்த காரணத்தால் தந்தையிடம் சென்று முறையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தந்தை 1 போன் தான் இருக்கிறது. நீ மூத்தப்பெண். இளையவர்களிடம் விட்டுக்கொடுத்து பாடங்களைப் படித்துக் கொள் எனக் கடுமையாக திட்டியிருக்கிறார். இதனால் அந்தப்பெண் எங்கள் அனைவருக்கும் தனித்தனி போன் வாங்கிக் கொடுங்கள். வகுப்புகளை சரியாக கவனிக்க முடியவில்லை எனக் கேட்டிருக்கிறார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த தந்தை மூத்தப் பெண்ணை கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்த கல்லூரி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். முதலில் உளுந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு கடந்த 30 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக திருநாவலூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆன்லைன் வகுப்புக்கு போன் இல்லாத காரணத்தால் சகோதிகளுடன் சண்டையிட்டு, தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.