இனி, கொரோனா நோயாளிகளைப் பயப்படாமல் அழைத்துச் செல்லலாம்!!! மருத்துவர்கள் உருவாக்கிய புதிய வாகனம்!!!

  • IndiaGlitz, [Monday,April 06 2020]

மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கும்போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது. இதனால் சில மருத்துவ ஊழியர்கள் பயத்தோடு இருக்கவேண்டிய கட்டாயமும் இருந்துவருகிறது. இத்தாலியில் இதுவரை 70க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். இந்தியாவிலும் 4 மருத்துவர்கள் சிகிச்சையின்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவர்களைவிட நர்ஸ், சுகாதாரப் பணியாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாக்பூரின் Aureus மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு புதிய வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இந்த வாகனத்தை பயன்படுத்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிமையாக இடமாற்றம் செய்யலாம். இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள படுக்கையின் மீது ஒரு வெளிப்படையான உறை காணப்படுகிறது. இந்த உறை கொரோனா வைரைஸால் பாதிக்கப்பட்ட நோயாளின்மீது போர்த்தப்படும். போர்வையால் முழுவதும் மூடப்பட்டு பயணம் மேற்கொள்ளும்போது வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் அபயாம் தடுக்கப்படுகிறது. இதே வழிமுறையை இறந்தவர்களின் பிணங்களை அகற்றும்போதும் பயன்படுத்த முடியும்.

நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரு தனி வாகனத்தையே Aureus மருத்துவர்கள் வடிவமைத்துள்ளர். தற்போது மருத்துவர்களின் இந்த முயற்சிக்குப் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.  

More News

கொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய பாஜக பிரமுகர்!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு தெருக்களில் வீசப்படும் கொரோனா பிணங்கள்!!!  ஈக்வடார் சந்தித்துவரும் நெருக்கடி!!!

பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத ஈக்வடார் கொரோனா பாதிப்பினால் கடும் நெருக்கடி நிலைமையை சந்தித்துவருகிறது.

ரஜினியுடன் அமிதாப், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி நடித்த படம் இன்று ரிலீஸ்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும்

கொரோனாவுக்கு பயந்து, தற்கொலை செய்துகொண்ட கால்பந்து அணியின் மருத்துவர்!!!

பிரெஞ்சு, கால்பந்து Ligue 1 Club Reims அணியின் மருத்துவர் கோன்சலஸ் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல இசையமைப்பாளர் காலமானார்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர்!

இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல்முறையாக வாய்ப்பு கொடுத்த பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 85.