close
Choose your channels

தியேட்டர் திறந்ததும் முதலில் ரிலீஸ் ஆவது நயன்தாரா படம் தான்: கோலிவுட் பிரபலம் தகவல்

Wednesday, May 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஒரு சில திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாக உள்ளது. ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வரும் 29-ம் தேதியும் கீர்த்தி சுரேஷின் ’பெங்குவின்’ அடுத்த மாதம் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை அடுத்து மேலும் சில திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால் இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை ஒடிடி பிளாட்பார்மில் வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்ததும் வெளியாகும் முதல் திரைப்படமாக ’மூக்குத்தி அம்மன்’ படம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்தே ’மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.