'மெர்சலில் எந்த காட்சியும் நீக்கம் இல்லை: ஹேமாருக்மணி

  • IndiaGlitz, [Sunday,October 22 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவில் டிரெண்டை ஏற்படுத்தியது என்பதும், எதனால் இந்த டிரெண்ட் உருவானது என்பதும் அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் 'மெர்சல்' படத்தில் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு தயாராக இருப்பதாகவும், வரும் திங்கள் முதல் அந்த காட்சிகள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது

ஆனால் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ ஹேமா ருக்மணி அவர்கள் சற்றுமுன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 'மெர்சல்' படத்தின் எந்தவொரு காட்சியும் நீக்கப்படவோ, வசனங்கள் மியூட் செய்யவோ இல்லை என்றும், தளபதி ரசிகர்கள் முழு படத்தையும் திருப்தியாக ரசிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த படத்தின் உயிர்நாடியே கடைசி காட்சியில் இருக்கும் அந்த வசனங்கள் தான். அந்த வசனங்களை நீக்கினால் ரசிகர்கள் அதிருப்தி அடைய நேரிடும் என்பதால் எந்த காட்சியும் நீக்கப்படவில்லை என்ற முடிவை தயாரிப்பு தரப்பினர் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க்கது

More News

'மெர்சலுக்காக விரைவில் பணம் கொடுப்பேன்: ப.சிதம்பரம்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனம் குறித்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு இந்த பிரச்சனை தேசிய பிரச்சனையாக உருவாகிவிட்டது.

'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சைகள் நாடே அறிந்ததே. நாமும் இந்த விஷயத்தை பலகோணங்களில் செய்திகளை வெளியிட்டோம்.

வேகமாக பரவும் விஜய்யின் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு பாஜக தலைவர்களால் இப்படி ஒரு இலவச விளம்பரம் கிடைக்கும் என்று படக்குழுவினர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

'மெர்சல்' பட விவகாரம்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பும் மிரட்டலும் தெரிவித்தபோது கோலிவுட் திரையுலகமே கொந்தளித்து

மெர்சலுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின்

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு எந்த நேரத்திற்கு தமிழிசை செளந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்தாரோ தெரியவில்லை, தமிழகத்தில் இருந்த ஒருசில செல்வாக்கும் அந்த கட்சிக்கு தற்போது இல்லாமல் போய்விட்டது.