டி.ஆர். ஒரு ஆன்மீகவாதியா? 'விழித்திரு' பிரச்சனை குறித்து மனம் திறந்த தன்ஷிகா 

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

தன்ஷிகா நடித்த 'விழித்திரு' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசியபோது டி.ராஜேந்தர் பெயரை விட்டுவிட்டதற்காக அதே மேடையிலேயே டி.ஆர்.ஆவேசமாக தன்ஷிகாவை சொற்களால் தாக்கினார். தன்ஷிகா மன்னிப்பு கேட்பதாக கூறியும் தொடர்ந்து டிஆர். தாக்கி பேசிக்கொண்டே இருந்ததால் படக்குழுவினர்களே அதிருப்தி அடைந்தனர். அதுமட்டுமின்றி டி.ராஜேந்தருக்கு விஷால் உள்பட திரையுலகமே கண்டனம் தெரிவித்தது.

ஆனால் தன்ஷிகா இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இதுகுறித்த கேள்விகளையும் அவர் பத்திரிகையாளர்களிடம் இருந்து தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த 'விழித்திரு' திறனாய்வுக் கூட்டத்தில் தன்ஷிகா இதுகுறித்து மனம் திறந்தார். அவர் பேசியதாவது, டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் என பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்த சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகின. டி.ஆர். சார், நான் ஒரு ஆன்மிகவாதி எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேசமாட்டார்.

எனக்கு அதிகமாகக் கோபம் வரும். அதனைக் கட்டுப்படுத்த நான் தியானம் செய்கிறேன். அதனால்தான் இப்போது அமைதியாக இருக்கிறேன். எப்போது நான் ஆன்மிக பாதையில் செல்லத் தொடங்கினேனோ, அப்போது முதல் சாந்தமாகிவிட்டேன். அதன் காரணமாகவே, அன்று அந்த சம்பவத்தின்போது நான் அமைதியாக இருந்தேன்.

அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பெண்கள் இந்த சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேர்கிறது.

அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் குறைகூறவில்லை. மீரா கதிரவன் போன்ற இயக்குநர்களால்தான் நான் இன்று சினிமாத் துறையில் நடிகையாக இருக்கிறேன். டி.ஆர். பிரச்சினையை இத்துடன் முடிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

More News

'அட்டக்கத்தி' ஜோடியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்

'உள்குத்து' திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும்

அறம் வெற்றியை தொடர்ந்து 'அறம் 2' உருவாகிறதா?

நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'அறம்' திரைப்படம் நல்ல வசூலை பெற்று வெற்றிப்படமாகிய நிலையில் நயன்தாராவே நேரில் தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்ததால் பிரமாண்டமான  வசூலை பெற்றுள்ளது.

தமிழ் படத்தில் அறிமுகமாகும் பாகிஸ்தான் பாடகர்

தமிழ் திரையுலகில் தயாராகும் திரைப்படங்கள் தற்போது உலக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் ஹாலிவுட் கலைஞர்கள் தமிழ் படங்களில் பணிபுரிவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

இதுதான் நமீதாவின் திருமண அழைப்பிதழ்

பிரபல நடிகையும் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவருமான நடிகை நமீதா தனது நீண்ட நாள் காதலரும், நடிகரும் தயாரிப்பாளருமான வீரா என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.

கெளதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அப்டேட்

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த 'ஹரஹர மகாதேவகி' படத்தின் வெற்றிக்கு பின்னர் அதே நிறுவனத்தின் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'