அர்ப விஷயத்துக்காக… கேப்டனையே பொது இடத்தில் சுட்டுக் கொன்ற பயங்கரம்!!!

  • IndiaGlitz, [Tuesday,December 22 2020]

 

தென் கொரியா கலாச்சார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் படு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஆனால் இதற்கு அப்படியே எதிர்மறையாக வடகொரியாவில் சர்வாதிகாரம் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நாட்டில் இருக்கும் மக்கள் வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ளவோ, ஏன் வெளிநாட்டின் டிவி, ரேடியா சேனலைப் பார்க்ககூட அனுமதி கிடையாது.

அதுவும் கொரோனா நேரத்தில் வடகொரியாவின் விதிமுறைகள் பல உலக நாடுகளையே கதிகலங்க வைத்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் கொரியாவின் ரேடியோ சேனலை வடகொரியாவைச் சேர்ந்த கப்பல் கேப்டன் ஒருவர் டியூன் செய்த கேட்டார் என்ற குற்றத்திற்காக பொது இடத்தில் வைத்து நூற்றுக் கணக்கான மக்கள் மத்தியில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார். இந்தச் செயல் உலக நாடுகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உங் கொரோனா நேரத்தில் தொடர்ந்து பல பயங்கரமான சட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அதில் எல்லையைத் தாண்டி வரும் எவரும், கேள்வி இல்லாமலே சுடப்படுவர் என்பதும் ஒன்று. இதைத்தவிர தென்கொரியாவுடன் இருந்து வந்த எல்லை போக்குவரத்து உட்பட அனைத்தையும் தடை செய்தார். தற்போது கப்பல் கேப்டன் ஒருவரை அந்நாட்டு இராணுவப் பாதுகாப்புப் படை பொதுவெளியில் வைத்து சுட்டுக் கொலை செய்து இருக்கிறது.

காரணம் வடகொரிய மக்களுக்கு வெளிநாட்டுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது வெளி உலகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவோ அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் இராணுவத்து றையில் ரேடியோ ஆப்பரேட்டராக வேலைப்பார்த்த முன்னாள் அதிகாரி சோய் (40) தனது ஓய்விற்கு பிறகு சொந்தமாக ஒரு மீன்பிடி கப்பலை வாங்கி இயக்கி வருகிறார். அந்த மீன்பிடி கப்பலை வைத்துக் கொண்டு நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது தென் கொரியாவின் ரேடியோ அலைவரிசையை டியூன் செய்து பலமுறை கேட்டு வந்துள்ளார்.

முன்பு இராணுவத்தில் பணியாற்றிய போதும் ரகசியமாகச் சோய் இப்படி பலமுறை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்பு கப்பல் தொழிலுக்கு வந்தப் பிறகும் வடகொரியாவின் சட்டவிரோத செயலாகக் கருதப்படும் ரேடியோ கேட்பதைத் தொடர்ந்து இருக்கிறார். இந்நிலையில் கப்பலில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளி ஒருவருடன் முரண்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அந்த முரண்பாட்டை மனதில் வைத்துக்கொண்டு இருந்த அத்தொழிலாளி வடகொரியாவின் பாதுகாப்பு படையிடன் சோயின் ரகசியச் செயலை போட்டு உடைத்து இருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்நாட்டு பாதுகாப்பு படை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் இருந்து திரும்பி வந்த சோயை நேராக அழைத்துக் கொண்டு ஒரு பொதுவெளிக்கு வந்திருக்கிறது. வந்தவுடன் பக்கத்துநாட்டு ரேடியோ சேனலைக் கேட்டதற்காக உங்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படுகிறது என ஒரு அதிகாரி கூறி இருக்கிறார். அந்தக் கட்டளை பிறந்தவுடனே பல நூறு இராணுவ ஊழியர்கள் இருந்த பொதுவெளியில் சோய் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் உலக நாடுகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

More News

விக்னேஷ்சிவன் - நயன்தாரா கண்டெடுத்த 'கூழாங்கல்'!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பதும்

ஆளுக்கொரு விதியா? கேப்டன் கோலி குறித்து முன்னாள் வீரரின் பாய்ச்சல்!!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அர்ச்சனாவிடம் அனிதா ரகசியமாக பேசியது என்ன? ஆரி சொல்ல வந்தது இதைத்தானா? கசிந்த வீடியோ!

நேற்றைய டாஸ்க் ஒன்றில் ஷிவானி ஆரியிடம் டிமோட்டிவேஷன் குறித்த ஒரு கேள்வி கேட்டபோது, அனிதா குறித்தும் அவரது கணவர் மற்றும் பெற்றோர் குறித்தும் ஆரி பேசிக் கொண்டிருந்தார்.

பாலின சிக்கலின் உச்சக்கட்டம்… மனதை உருக்கும் சம்பவம்!!!

பாகிஸ்தானில் பிறந்த 2 சகோதரிகள் பாலின பிறப்புறுப்பு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு, கடும் சிரமத்திற்கு இடையே ஆணாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சுரேஷ் ரெய்னா, ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி திடீர் கைது: என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசைனாகான் உள்பட 34 பேர் திடீரென கைது