close
Choose your channels

எதுவுமே உண்மையில்லை: 'சுல்தான்' படம் குறித்து விளக்கமளித்த எஸ்.ஆர்.பிரபு

Thursday, May 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் ’சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில் திடீரென கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது சமூக வலைதளத்தில் ’கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் இந்த படம் சரியான நேரத்தில் ரிலீஸாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஒருசில ஊடகங்களில் ’சுல்தான்’ திரைப்படத்தின் பணிகள் இன்னும் அதிகம் பாக்கியிருப்பதால் இந்த படம் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில்தான் வெளிவரும் என்றும், ‘காஷ்மோரா’ போன்று இந்த படமும் ஃபேண்டஸி படம் என்றும் இந்த படத்தில் இருந்து அனிருத் விலகிவிட்டதால் விவேக் மெர்வின் புதிய இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த தகவல்கள் அனைத்துமே உண்மையில்லை என்று ‘சுல்தான்’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.