'நேர் கொண்ட பார்வை' படத்தின் முக்கிய பணி தொடங்கியது!

  • IndiaGlitz, [Monday,June 17 2019]

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்தாலும் தற்போது ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அஜித் உள்பட இந்த படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று முதல் புதிய பணி தொடங்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் பின்னணி இசை குறித்த பணியை இன்று முதல் தொடங்கியுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அஜித் படங்களான 'பில்லா', பில்லா 2, ஆரம்பம், 'மங்காத்தா' போன்ற படங்களின் மிகப்பெரிய பிளஸ்களில் ஒன்று யுவனின் பின்னணி இசை. இதே போன்று இந்த படத்திற்கும் பட்டையை கிளப்பும் வகையில் யுவனின் பின்னணி இசை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

More News

விஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்: ஸ்ரீரெட்டி 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் குறித்து சமீபத்தில் வரலட்சுமி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

கதிர், சூரி படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த நடிகர் கதிர் தற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டு பிரபலங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இம்மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றது.

ஜெயமோகனுக்கு எதிராக திரண்ட வணிகர் சங்கங்கள்: காவல்துறையிலும் புகார்

எழுத்தாளர் ஜெயமோகன் புளித்த மாவு வாங்கிய விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயமோகனை அடித்த கடைக்காரர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன்பாபு!

சூர்யா நடித்து வரும் 'சூரரை போற்று திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.