close
Choose your channels

என் சிவன் அனுமதி இல்லைன்னா அந்த எமனே கண்ணெடுத்து பார்க்க மாட்டான்: அகண்டா 2 டீசர்..!

Tuesday, June 10, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான என்.டி.ஆர். பாலகிருஷ்ணா நடித்த ’அகண்டா 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அகண்டா படத்தின் முதல் பாகத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தமன் இசையில் போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், என்.டி.ஆர். பாலகிருஷ்ணன் உடன் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில், டீசரின் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"என் சிவன் அனுமதி இல்லைனா அந்த எமனே கண்ணெடுத்து பார்க்க மாட்டான். நீ பாக்குறியா?" என்ற வசனமும், "அப்பாவி உயிரை எடுத்துடுவியா?" என்ற வசனமும் டீசரில் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த டீசர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளதை அடுத்து, இது ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment