தடைகளை கடந்தது ஸ்வாதி கொலை வழக்கு திரைப்படம்: ஓடிடியில் ரிலீஸ்

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, சூளைமேடு சௌராஷ்டிரா நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஸ்வாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில், கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அதே ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி புழல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். சிறையில் மின்சார வயரை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் ‘நுங்கம்பாக்கம்’ என்ற திரைப்படம் தயாரானது. ’உளவுத்துறை’ மற்றும் ’ஜனனம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரமேஷ் செல்வன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் வெளியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தயாராகிவிட்டாலும், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும், சட்டச்சிக்கல் காரணமாகவும் இந்த படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்த படத்தின் அனைத்து அரசியல் மற்றும் சட்டப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் ஓடிடியில் இந்த படம் ரிலீஸாகவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 

More News

மூன்று தாடிக்காரர்களின் வழி வாழும், திரையுலகை ஆளும் தாடிக்காரர்: சூரி வாழ்த்து

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் கடந்த 2007ஆம் ஆண்டு 'பொல்லாதவன்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

போதைப்பொருள் விவகார வழக்கு: இன்னொரு நடிகையும் சிக்குகிறாரா?

கன்னட திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக சமீபத்தில் கன்னட இயக்குனர் இந்திரஜித்து லங்கேஷ் அவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி

ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை பாயும்- தமிழக அரசு அதிரடி!!!

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்போது ஆன்லைனில் வகுப்பு பாடங்களை தொடங்கி இருக்கின்றன.

ஆந்திராவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை- மீறினால் 2 ஆண்டு சிறை!!! காரணம் தெரியுமா???

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் போன்ற சில விளையாட்டுகளுக்கு தடைவித்து உத்தரவிட்டு இருக்கிறார்

போதைப்பொருள் விவகாரம்: பிரபல தமிழ் நடிகை கைது

கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாக போதைபொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி நடிகை ஒருவர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது