ஒரு நுரையீரலைக் கொண்ட இளம்பெண்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வெற்றிக்கதை!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் ஆக்சிஜன் பற்றாக்குறை, உயிரிழப்பு எனத் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளையே பார்த்து வருகிறோம். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரே ஒரு நுரையீரலை மட்டும் கொண்டு இருந்தாலும் அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் திகம்கர்க் எனும் இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் 39 வயது இளம்பெண் பிரஃபுலித் பீட்டர். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த மருத்துவமனையில் இருந்த தலைமை மருத்துவர்கள் உட்பட பலரும் கவலை அடைந்துள்ளனர். காரணம் பிரஃபுலித்துக்கு ஒரே ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு எக்ஸ்ரேவின்போது பிரஃபுலித்துக்கு ஒரே ஒரு நுரையீரல் மட்டும் இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் பிரஃபுலித்தால் கொரோனாவில் இருந்து குணமாக முடியுமா என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில் பிரஃபுலித் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். மேலும் இந்த நாட்களில் யோகா, பிராணயாமா அதோடு சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் நுரையீரல் சுவாச உறுப்பை செயல்திறன் கொண்டதாக மாற்றுவதற்கு அடிக்கடி பலூன்களை ஊதி உள்ளார். இப்படி தனது வலிமையான மன உறுதியால் பிரஃபுலித் தற்போது கொரோனா நோயில் இருந்து வெற்றிக்கரமாக வெளிவந்துள்ளார்.

இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்டுள்ள அவர் கொரோனா நோயில் இருந்து குணமாகி விடுவேன் என உறுதியாக நம்பினேன். எனது சிறு வயதிலேயே ஒரு அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் எனது ஒரு நுரையீரலை அகற்றி உள்ளனர். இந்த விஷயம் கடந்த 2014 ஆம் ஆண்டுதான் எனக்கு தெரியவந்தது. 2 டோஸ் தடுப்பூசிகளை நான் ஏற்கனவே செலுத்திக் கொண்டேன். மேலும் சுவாச உறுப்புகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள நான் ஓயாது முயற்சி செய்து கொண்டே இருந்தேன் எனத் தெரிவித்து உள்ளார். கொரோனா நோய் தீவிரம் அடைந்து வரும் இந்த சூழ்நிலையில் பிரஃபுலித்தின் கதை பலருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு விலகினார் என்பதையும், அதனை அடுத்து கட்சியின் சார்பில் மதுரவாயில்

யுவன்ஷங்கர் ராஜா மற்றும் ஏ.ஆர்.அமீன் பாடிய தனித்துவ பாடல் வைரல்!

இன்று ரம்ஜான் பண்டிகையை அடுத்து அடுத்து தமிழ் திரையுலக இளம் இசைமேதைகளில் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களின் மகன் ஏ.ஆர்.அமீன் அவர்களும் இணைந்து

ஊரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்…

மத்திய அரசு, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின்

ஓடிடியில் ரிலீஸாகும் 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்!

திரையரங்குகளில் ரிலீசாகி மூன்றே நாட்களில் தூக்கப்பட்ட திரைப்படம் தற்போது ஓடிடியில் விரைவில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

ஆக்சிமீட்டரை பயன்படுத்துவது எப்படி? 'தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை திரை உலக பிரபலங்கள் பலர் ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே