close
Choose your channels

உள்ளாடையுடன் டூட்டி பார்த்த நர்ஸ்: இன்ப அதிர்ச்சியில் கொரோனா நோயாளிகள்

Thursday, May 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் பணிபுரிந்த 20 வயது இளம்பெண் ஒருவர் உள்ளடை மட்டும் அணிந்து டூட்டி பார்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

உள்ளாடை மட்டும் அணிந்து டூட்டி பார்த்த அந்த நர்ஸை கொரோனா நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை சமூக தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் நாடு முழுவதும் வைரலானது. ஆனால் இதுகுறித்து நோயாளிகள் யாரும் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உள்ளாடையுடன் டூட்டி செய்த நர்ஸ் மீது எந்தவிதமான புகாரும் வரவில்லை என்றாலும் மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. அவர் நர்ஸ் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டி அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் கடுமையான வெப்பம் காரணமாக தன்னால் நர்ஸ் உடை அணிந்து அதற்கு மேல் பி.பி.ஈ உடை அணிந்து கொள்வது தனது அசெளகரியமாக இருந்ததாக கூறினார்.

இருப்பினும் அவருடைய விளக்கத்தை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாடை நர்ஸ் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகள் மிகுந்த வருத்தத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.