மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி, நடிகை, ...!

  • IndiaGlitz, [Thursday,August 26 2021]

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பசீர்ஹட் தொகுதியில், எம்.பியாக இருப்பவர்தான் நுஸ்ரத் ஜஹான். இவர் இதற்கு முன் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். அரசியலில் மக்களவை உறுப்பினர் ஆன பின்பு, இவருக்கும் தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது. இதன்பின் சிறிது நாட்களில் தான் கணவரை பிரிந்ததாகவும், எங்களுடைய திருமணம் சட்டமுறைப்படி நடக்கவில்லை என்று நுஸ்ரத் கூறியுள்ளார். இந்த தகவல்கள் சர்ச்சையாக, இதற்கிடையில் இவர் கருத்தரித்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து நுஸ்ரத் விளக்கமளித்திருப்பதாவது, எங்களுக்கு இந்தியாவின் சட்டப்படி முறையான திருமணம் நடக்கவில்லை. விவகாரத்து பெற வேண்டிய அவசியமும் இல்லை. நாங்கள் பல நாட்களுக்கு முன்பே பிரிந்து விட்டோம். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட சூழல் சார்ந்தது, இதுபற்றி மேலும் எனக்கு பேச விருப்பம் கிடையாது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து நடிகர் மற்றும் பாஜக-வை சேர்ந்த யாஷ்தாஸ் குப்தாவும், நுஸ்ரத்-ம் காதலித்து வருவதாக செய்திகள் உலாவின. ஆனால் இதுகுறித்த தகவல்கள் எதையும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.
தற்போது நுஷ்ரத் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில், குழந்தை பிறப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.

More News

மத போதகராக மாறிய தமிழ் நடிகை!

தமிழ் நடிகை ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திடீரென கிறிஸ்துவ மத போதகராக மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே பிஸியான நடிகர் விஜய் சேதுபதி என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். அவர் நடித்து முடித்த படங்கள்

பாக்ஸிங்கை விட இது ரத்த பூமி: பசுபதிக்கு அட்வைஸ் செய்த ஆர்யா

பாக்ஸிங்கை விட இது ரத்த பூமி என டுவிட்டருக்கு வந்த நடிகர் பசுபதிக்கு நடிகர் ஆர்யா அட்வைஸ் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிவிட்ட பிரபல அரசியல்வாதி… அவரே ரசித்த வைரல் புகைப்படம்!

காங்கிரஸ் கட்சியில் முக்கிய அரசியல் தலைவராக இருந்துவரும் சசிதரூர் பற்றிய மீம்ஸ்கள்தான் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் பட்டையை கிளப்பி வருகிறது.

பிழைப்புக்காக பேருந்து ஓட்டும் முன்னாள் சிஎஸ்கே வீரர்… ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய இலங்கை வீரர் ஒருவர் தற்போது ஆஸ்திரேலிய தெருக்களில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.