ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-தீபா சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தினம் இன்று. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், ஜெயலலிதா மரணம் அடைதுவிட்டதால் அவரது தண்டனை நீக்கப்பட்டு, மீதி மூவருக்கும் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பால் முதல்வர் ரேஸில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த முதல்வர் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமியா அல்லது ஓ,.பன்னீர்செல்வமா? என்ற நிலை உள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஜெயலலிதாவின் மெரீனா நினைவகத்திற்கு சென்றுள்ளார்.

இதில் திடீர் திருப்பமாக ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வந்துள்ளார். முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தீபா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சந்தித்தனர். ஏற்கனவே தீபாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு ஓபிஎஸ் வந்து தியானம் செய்ததால் பெரிய திருப்பம் தமிழக அரசியலில் ஏற்பட்டது. அதேபோல் இன்றும் ஓபிஎஸ் அவர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்துள்ளது மட்டுமின்றி தீபாவையும் சந்தித்துள்ளார். எனவே நாளை என்ன திருப்பம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஓபிஎஸ் இல்லத்தில் தீபா. ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வரும் 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்த நிலையில் சற்று முன்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து தனது ஆதரவை அளித்தார்...

நயன்தாரா காதலரின் திடீர் மாற்றம் ஏன்?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் காதலித்து வருவதாகவும், 'நானும் ரெளடிதான்' படத்தின்போது தோன்றிய இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் கூறப்படுகிறது...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-தீபா சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தினம் இன்று. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், ஜெயலலிதா மரணம் அடைதுவிட்டதால் அவரது தண்டனை நீக்கப்பட்டு, மீதி மூவருக்கும் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுத

எடப்பாடி பழனிச்சாமி உள்பட 10 அமைச்சர்களுக்கு ஆளுனர் அழைப்பு

அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை

கூவத்தூர் சென்ற பாண்டியராஜன் தடுத்து நிறுத்தம்.

சசிகலா ஆதரவு தரப்பி எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய விருப்பத்தின் பேரிலே இருப்பதாகவும் இருவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.