சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு! 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

வரும் 21 ஆம் தேதி முதல் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவை எதிர்கட்சியின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

முன்னதாகத் தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் துணைத் தலைவருக்கான பதவி முடிவு செய்யப்படாத நிலையில் இன்று அத்தேர்வு நடைபெற்றது. மேலும் கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதோடு இந்தக் கூட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர்கள், உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனால் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூட்டறிக்கை ஒன்று வெளியாகியது. அதில்,

கள்ளக்குறிச்சி முன்னாள் அமைச்சர் ஆனந்தன்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.பி. வி.கே. சின்னசாமி

தேனியைச் சேர்ந்த ஏ.கே.எம். அழகர் சாமி

வேலூரைச் சேர்ந்த எஸ்.கே.எம்.பி வாசு

ராமநாதபுரத்தை சேர்ந்த சோமாத்தூர், ஆ.சுப்பிரமணியம், வின்சென்ட் ராஜா

பருத்தியூர் நடராஜன் உள்ளிட்ட 15 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

More News

தேசிய விருது பெற்ற இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்: நடிகை கஸ்தூரி இரங்கல்!.

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் ஒருவர் சாலை விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை கஸ்தூரி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்து உள்ளார்

தி ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் சர்ச்சையை சம்பாதித்த இரட்டையர்கள்!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான “தி ஃபேமிலி மேன் 2” வெப் தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

சென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்!

சென்னையில் ஜிம் ஒன்றிற்கு சென்ற இளம் பெண்ணிடம் அதன் பயிற்சியாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

சாதாரண கணக்கே எனக்கு தெரியாது: காவல்துறை ஆணையரிடம் புகாரளித்த நடிகர் செந்தில் பேட்டி!

பிரபல காமெடி நடிகர் செந்தில் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு ஒன்றை தொடங்கிய மர்ம நபர் ஒருவர், அதன் மூலம் முதல்வருக்கு எதிராகவும், டாஸ்மார்க் கடை திறப்பிற்கு எதிராகவும் அவதூறான

என்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு!

சமீபத்தில் பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், தென்னாபிரிக்க வீரருமான டுப்லஸ்ஸிஸ் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்பது தெரிந்ததே