close
Choose your channels

லண்டன் தொழிலதிபரை மணந்த 'ஓ சொல்றியா மாமா' பாடலை பாடிய பாடகி!

Saturday, May 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலின் ஹிந்தி பாடலை பாடிய பாடகிக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலை தமிழில் நடிகை ஆண்ட்ரியா பாடிய நிலையில் இந்தியில் பிரபல பாடகி கனிகா கபூர் பாடினார். இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 43 வயதாகும் பாடகி கனிகா கபூர், லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் கெளதம் ஹதிராமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று லண்டன் ஓட்டலில் நடந்த இந்த திருமணத்தில் இரு தரப்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.