கொரோனாவில் இருந்து மீண்ட பின்பும், விடாமல் துரத்தும் மறதி நோய்… மருத்துவர்கள் அச்சம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அரிதாக மூளை பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் தற்போது அதிகமாகப் பரவிவரும் டெல்டா வைரஸ் ஏற்படுத்தும் மூளை பாதிப்பு காரணமாக பெரும் அளவில் நரம்பியல் அறிகுறிகள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் மூளை பாதிப்பின் காரணமாகச் சிலருக்கு மறதி நோய் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்ட பிறகு சிலருக்கு மறதி நோய் ஏற்படுகிறது. இதனால் என்ன சாப்பிட்டோம் என்பதைக் கூட சிலர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் பொதுவா சுவாசப் பாதையைப் பாதிக்கிறது என மருத்துவ உலகம் சுட்டிக்காட்டி இருந்தது. இந்த சுவாசப்பாதை வழியாக இனப்பெருக்கம் செய்யும் கொரோனா வைரஸ் மேல் நோக்கி மூளை வரைக்கும் சென்று விடுகிறது. இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு பலருக்கு மறதி நோய் ஏற்படுகிறது. இப்படி வரும் மறதி நோய் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் அல்லது அறிகுறியே இல்லாதவர்களுக்குக் கூட வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதுவும் நீண்ட நாட்களாக ஐசியுவில் இருப்பவர்கள், தீவிர கொரேனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இதுபோன்ற குழப்ப நிலை எளிதாக ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற மறதி நோய் நாட்கள் செல்ல செல்ல குறைந்துவிடும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

More News

துருவ்-மாரிசெல்வராஜ் படம் தொடங்குவது எப்போது?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கார்த்தி படத்திற்காக ரூ.2 கோடியில் பிரமாண்ட செட்: விரைவில் படப்பிடிப்பு

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி அவர் 'சர்தார்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

தல தோனி கொடுத்த சர்ப்பிரைஸ் கிஃப்ட்… செம குஷியில் சாக்ஷி வெளியிட்ட புகைப்படம் வைரல்!

நட்சத்திர தம்பதிகளான எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி ஆகிய இருவரும் தங்களது 11 ஆவது திருமணநாளை கடந்த ஜுலை 4 ஆம் தேதி கொண்டாடி உள்ளனர்.

அவர 4 பேர் ட்ரிக்கர் பண்ணி பேச வச்சாங்க ...! புலம்பும் மதன் மனைவி கிருத்திகா....!

மதனுடன் சேர்ந்து பப்ஜி கேம் விளையாடவில்லை என்றும், அந்த வீடியோக்களில் வரும் குரல் தன்னுடையது இல்லை என்றும் அவரது மனைவி கிருத்திகா பேட்டி அளித்துள்ளார்.

அச்சு அசலாக சாவித்ரியாக மாறிய சீரியல் நடிகை: வைரலாகும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகர் திலகம் சாவித்ரி நடிப்பைப் பற்றி யாருக்கும் கூற வேண்டிய அவசியமே இல்லை. எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சாவித்ரி,