close
Choose your channels

மனித கறியை ருசித்து சாப்பிட்ட ஆசாமிகள்… போலீசார் கைது!

Thursday, July 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒடிசா மாநிலத்தில் தகன மேடையில் எரிந்துகொண்டிருந்த மனித கறியை சாப்பிட்டுவிட்டு மது அருந்திய இரண்டு பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசா மாநிலத்திலுள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள பந்தாசாஹி எனும் பகுதியில் இருக்கும் இடுகாட்டியில் 25 வயது பெண் ஒருவரின் உடல் தகன மேடையில் வைத்து எரிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி எரிந்து கொண்டிருந்த அந்த பெண்ணின் மாமிசத்தை எடுத்து இரண்டுபேர் ருசித்து சாப்பிட்டதோடு அங்கேயே மது அருந்தவும் துவங்கியுள்ளனர். இந்தக் காட்சிகளைப் பார்த்த இறந்த பெண்ணின் உறவினர்கள் கடும் கோபத்துடன் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் அவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பந்தாசாஹி பகுதியில் எரிந்து கொண்டிருந்த மாமிசத்தை சாப்பிட்ட இருவரும் தந்துனி எனும் கிராமத்தில் வசித்து வருவதாகவும் அவர்கள் சுந்தர் மோகன் சிங் (58), நரேந்திர சிங் (25) என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் ஒருவர் மந்திர வாதி என்றும் கூறப்படும் நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படாசாஹி பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் குடிபோதையில் நரமாமிசத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டதாக இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். உண்மையில் அவர்கள் குடிபோதையில்தான் இதைச் செய்தார்களா? அல்லது வேண்டுமென்றே சாப்பிட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார்களா? என்று சந்தேகம் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.