close
Choose your channels

உறவினரால் பாலியல் பலாத்காரம்: கல்லூரி பேராசிரியை தூக்கில் தொங்கி தற்கொலை

Monday, December 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சகோதரி கணவரின் தம்பியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பரிபதா என்ற பகுதியில் கல்லூரிப் பேராசிரியை ஒருவர் பெண்கள் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய சகோதரி கணவரின் தம்பி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதுகுறித்து போலீசில் பேராசிரியை புகார் செய்ததாகவும் தெரிகிறது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளனர் ஆனால் அந்த நபர் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கல்லூரி பேராசிரியை தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றபோது சகோதரி கணவரின் தம்பி மட்டும் தனியாக இருந்தார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து கல்லூரி பேராசிரியையை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கல்லூரி பேராசிரியை ஹாஸ்டலுக்கு திரும்பி வந்ததும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

ஹாஸ்டலில் உள்ள பெண்கள், கல்லூரி பேராசிரியையின் அறையின் கதவு நீண்ட நேரம் பூட்டி கிடந்ததாகவும் உணவு சாப்பிடுவதற்கு அவர் வரவில்லை என்பதை அறிந்தும் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது கல்லூரி பேராசிரியை தூக்கில் தொங்கி பரிதாபமாக மரணம் அடைந்திருந்தார். இதனை அடுத்து கல்லூரி பேராசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos