சென்னை ஜெமினி மேம்பாலத்தில் ஓடிய பாமாயில் ஆறு: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Sunday,April 12 2020]

சென்னையின் முக்கிய பகுதியான ஜெமினி மேம்பாலம் அருகே திடீரென பாமாயில் ஆறு ஓடியதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர்.

சென்னையில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்திற்கு பாமாயில் ஏற்றி வந்த லாரி ஒன்று ஜெமினி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால், ஜெமினி மேம்பாலம் முடியும் இடத்தில் அந்த லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனை அடுத்து அந்த லாரியில் இருந்த 2000 லிட்டர் பாமாயில் சாலையில் ஆறுபோல் ஓடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்த சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து, லாரி தீப்பிடித்துவிடாமல் இருக்க முதலில் லாரியை சுற்றி தண்ணீரை பீச்சி அடித்தனர். அதன் பின்னர் டிரைவரிடம் போலீசார் விசாரித்த போது ஜெமினி மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் இதனால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஜெமினி மேம்பாலத்தில் இந்த விபத்து நேர்ந்தபோது ஒரு வாகனம் கூட செல்லாததால் வேறு எந்த அசம்பாவிதமும் இந்த விபத்தால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஷங்கர், முருகதாஸை விட இருமடங்கு சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளமும், அஜித், விஜய் சம்பளம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும்

முன்னணி இயக்குனர்களை விட இருமடங்கு சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளமும், அஜித், விஜய் சம்பளம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும்

அட்லியின் அடுத்த பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடித்த 'ராஜா ராணி' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த 'தெறி' 'மெர்சல்' மற்றும் 'பிகில் ஆகிய

முதல்முறையாக பெண்களின் பாராட்டுக்களை பெற்ற ஸ்ரீரெட்டி வீடியோ

நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதும், ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும்,

ஊரடங்கு முடிந்தாலும் சுய கட்டுப்பாடு வேண்டும்: பிரபல நடிகை

கொரோனா வைரஸ் பிரச்சனை, ஊரடங்கு பிரச்சனை ஆகியவை முடிந்தபின்னர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்க்கு திரும்பியதுடன் என்ன நடக்கும் என்பது குறித்து பல பொருளாதார அறிஞர்கள் தங்கள் கணிப்புகளை கூறி வருகின்றனர்.